கந்தப்பளையில் இறைச்சிக்கடையோடு கூடிய குடியிருப்பில் தீவிபத்து!!

கந்தப்பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கந்தப்பளை நகரில் உள்ள இறைச்சிகடையிலும் அதன் அருகாமையில் இருந்த குடியிருப்பிலும் திடீர் தீவிபத்து ஒன்று இடம்பெற்றுள்ளதாக கந்தப்பளை பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் நேற்று இரவு 8 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இத் தீவிபத்தில் இறைச்சிகடையும் குடியிருப்பும் முற்றாக எறிந்து சாம்பராகியுள்ளதாகவும் குடியிருப்பில் இருந்த உபகரணங்கள் அனைத்தும் எரிந்து சாம்ராகியுள்ளதாகவும் குடியிருப்பில் இருந்த எவருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லையெனவும் கந்தப்பளை பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இதேவேளை குறித்த பகுதியில் ஏற்பட்ட தீயினை கந்தப்பளை பொலிஸார், பொதுமக்கள் மற்றும் நுவரெலியா பிரதேச சபையினர்  இணைந்து தீயினை கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக நுவரெலியா பிரதேசசபையின் தலைவர் வேலுயோகராஜ் தெரிவித்தார்.
இதேவேளை தீ பற்றியமைக்கான காரணம் இதுவரையிலும் கண்டறிப்படவில்லையெனவும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கந்தப்பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.