ஓமந்தையில் இரு குழுக்களுக்கிடையிலான மோதலில் ஒருவர் கைது!!

வவுனியா ஓமந்தையில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் இரு மோட்டார் சைக்கிள்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதுடன்

ஒருவரை கைது செய்துள்ளதாக ஓமந்தை பொலிஸார் தெரிவித்தனர்.

இதுபற்றி தெரியவருவதாவது,

நேற்று இரவு வவுனியா ஓமந்தை சின்னப்புதுக்குள வீதியில் இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் இருவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  அனுமதிக்கப்பட்டவரில் ஒருவரை ஓமந்தை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இம்மோதலில்  இரு மோட்டார் சைக்கிள்கள் எரியூட்டப்பட்டு முற்றாக தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. அத்தோடு இம்மோதலில் ஈடுபட்டவர்கள் விட்டுச்சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்றினை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இதேவேளை இச்சம்பம் தொடர்பான மேலதிக விசாரணையை ஓமந்தை  பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் இச்சம்பவத்தில்  கைது செய்யப்பட்ட நபர் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.