அவுஸ்திரேலியாவில் ஆபத்தில் சிக்கிய இலங்கை தமிழ் தம்பதியினருக்கு தீர்வு!!

அவுஸ்ரேலியாவில் நடைபெறவுள்ள தேர்தலில் தொழிற்கட்சி வெற்றியடைந்தால், இலங்கைக்கு நாடு கடத்தப்படவுள்ள தமிழ் தம்பதியினர் அந்நாட்டிலேயே தங்குவதற்கான வாய்ப்பு கிட்டுமென அக்கட்சி ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.


கடவுச்சீட்டு காலம் முடிவடைந்த நிலையில் அந்நாட்டில் தங்கிருந்த இலங்கையைச் சேர்ந்த பிரியா, நடேசலிங்கம் மற்றும் அவரது இரண்டு பிள்ளைகளையும் கடந்த வருடம் கைது செய்த அதிகாரிகள், அவர்களை இன்னும் தடுப்பு காவலலில் வைத்துள்ளனர்.

ஆனாலும் அவர்களை அவுஸ்திரேலியாவிலேயே தங்க அனுமதிக்க வேண்டுமென கூறி 18000க்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்டு மனுவொன்றை அந்நாட்டு அரசாங்கத்திடம் கையளித்துள்ளனர்.

இந்நிலையிலேயே  அவுஸ்திரேலியாவின் தமிழ் சபை உறுப்பினர் ஆரன் மயில்வாகனம்  மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.