வீட்டை துவம்சம் செய்த காட்டு யானை: மக்கள் அச்சம்!!

கோவை மாவட்டம் செம்புக்கரை பழங்குடியின கிராமத்திற்குள் புகுந்த காட்டு யானை ஒன்று வீட்டை முற்றிலுமாக சேதப்படுத்திய சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செம்புக்கரை பழங்குடியின கிராமத்திற்குள் நேற்று முன்தினம் புகுந்த காட்டு யானை, சி. வெள்ளிங்கிரி என்பவரின் வீட்டில் உணவு தேடி சென்ற போது, சுற்றுச்சுவர் மற்றும் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதையடுத்து, காட்டு யானை மீண்டும் வனப்பகுதிக்குள் சென்று விட்டது. இதில் வீடு முற்றிலுமாக சேதமடைந்தது. ஆனைகட்டியில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் காட்டு யானையால் வீடு சேதமடைவது இது 2-வது முறையாகும்.

வனங்களில் ஏற்படும் காட்டுத் தீயினால், வனவிலங்குகள் காடுகளை விட்டு வெளியேறி, மனித குடியிருப்புகளுக்கு அருகாமையில் சுற்றித் திரிகின்றன. எனவே, வனப்பகுதிகளை ஒட்டியுள்ள பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.