மாகாண சபைகளுக்கான தேர்தல்களை மிக விரைவாக நடத்தவேண்டும் – ஹர்ஷன!!

எல்லை நிர்ணயம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை தீரத்துக்கொண்டு அனைத்து மாகாண சபைகளுக்குமான தேர்தல்களை மிக விரைவாக நடத்தவேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஜனாதிபதித் தேர்தலை விரைவாக நடத்த ஐக்கிய தேசியக் கட்சி முயற்சிக்கவில்லை. ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன தீர்மானித்தால் மாத்திரமே தேர்தலை விரைவாக நடத்த முடியுமென்றும் அவர் குறிப்பிட்டார்.
தேர்தல்கள் குறித்து கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது, “உரிய காலத்துக்கு முன்பாகவே ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கான தீர்மானத்தை எடுக்கும் அதிகாரம் ஐக்கிய தேசியக் கட்சிக்கு கிடையாது.
அவ்வாறு ஜனாதிபதியின் ஆட்சிக்காலம் நிறைவுக்கு வருவதற்கு முன்னரே ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கான அதிகாரம் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கே உள்ளது.
மாகாண சபைகளுக்கான தேர்தலும் மிக விரைவாக நடத்தப்பட வேண்டும். எல்லை நிர்ணயம் தொடர்பான பிரச்சினைகளை தீர்த்துக்கொண்டு விரைவில் மாகாண சபைத் தேர்தலை நடத்தவேண்டும் என்தே எமது எதிர்பார்ப்பாகவும் உள்ளது” எனத் தெரிவித்தார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.