ஈரான் உயர்ஸ்தானிகருடன் ஆளுநர் பேச்சு!!

ஆளுநர் சுரேன் ராகவனுக்கும் இலங்கைக்கான ஈரானின் தூதுவர்  Mohammad Zaeri Amirani க்குமிடையிலான சந்திப்பு இன்று (16) மாலை கொழும்பிலுள்ள ஈரானிய தூதரகத்தில் இடம்பெற்றது. 


வடமாகாணத்தின் குடிநீர் பிரச்சினையை தீர்க்க வேண்டுமென்ற ஜனாதிபதி  மைத்ரிபால சிறிசேனவின்  கரிசனைக்கும் தொலைநோக்கிற்கும் அமைய மத்திய மாகாணத்திலிருந்து நிலக்கீழ் குழாய் வழியாக வடமாகாணத்திற்கு குடிநீரினைக் கொண்டுவருவதற்கு ஈரானிய அரசின் உதவி இதன்போது  ஆளுநரால் கோரப்பட்டது.

இதற்கு சாதகமான சமிக்கை வெளியிட்ட ஈரானிய தூதுவர், முதற்கட்டமாக இது தொடர்பிலான சாத்தியமான வழிகளை ஆராயும் பொருட்டு இத்துறையில் நிபுணத்துவம் பெற்ற  ஈரானின் மூன்று நிறுவனங்களை  எந்தவித கட்டணங்களும் இல்லாமல் தன்னார்வ ரீதியில் இலங்கைக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக  குறிப்பிட்டார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.