சஹ்ரானின் சகா இஸ்லாமியர் தற்கொலை தாக்குதலிற்கு தயாரானவர் கைது!

இஸ்லாமிய  ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய 29 வயது இஸ்லாமிய இளைஞர் கேரளாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.


தேசிய தௌஹீத் ஜமா அத் அமைப்பின் இஸ்லாமிய தலைவர் சஹ்ரான் ஹாஷிமுடன் இவர் நெருக்கமாக இருந்தது விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த ரியாஸ் அபூபக்கர் என்ற இளைஞரை தேசிய புலனாய்வு அமைப்பினர் கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் ஐஎஸ் இயக்கத்துடன் தொடர்பு வைத்ததும், கேரளாவில் தற்கொலை தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததும் தெரியவந்துள்ளது. அத்துடன் சஹ்ரான் ஹாஷிமின் பேச்சுகளை ஒரு வருடத்திற்கும் மேலாக ரியாஸ் அபூபக்கர் தொடர்ச்சியாக கேட்டு பின்பற்றி வந்தது தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்டுள்ள ரியாஸ் அபூபக்கர் தேசிய புலனாய்வு அமைப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.