கிளிநொச்சியில் ஏற்ப்பட்ட விபத்தில் ஒருவர் பலி!

கிளிநொச்சியில் சற்று முன்னர் இடம்பெற்ற மோட்டார்சைக்கிள் விபத்தில் ஒருவர்  பலியாகியுள்ளார்.


கிளிநொச்சி சேவியர் கடை சந்தி அண்மித்த பகுதியில் இன்று மாலை  துவிச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் வண்டி ஆகியன மோதியதிலேயே இவ்விபத்து சம்பவித்துள்ளது.

துவிச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த சதாசிவம் சங்கநிதி வயது 83 என்ற முதியவரை இவ் விபத்தில் உயிரிழந்துள்ளார்.

பலத்த காயங்களுடன்  1990  நோயாளர் காவு வண்டியில் கிளிநொச்சி பொது
வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்று  சிகிச்சை அளித்தபோதும்,   சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

வீதியில் துவிச்சக்கர வண்டியில் பயணித்துக்கொண்டிருந்த  முதியவரை பின்னால் வந்த மோட்டார் சைக்கிலில் பயணித்தவர் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் துவிச்சக்கர வண்டியில் சென்றவருடன் மோதுண்டு இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிலில் பயணித்தவரும் பலத்த காயங்களுடன் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கJ.

இதேவேளை இவ் விபத்து  தொடர்பாக மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேட்கொண்டு வருகிறார்கள்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo






கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.