பக்தர்களின் செருப்பை துடைத்து, ஓட்டு போட வேண்டாம் என்று கேட்ட பெண்!!

பக்தர்களின் செருப்பை துடைத்து நூதன பரப்புரையில் ஈடுபட்ட பெண் கைது செய்யப்பட்டார்.



சூறாவளிப் பிரசாரம் 


நாடாளுமன்ற மக்களவை தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சித் தலைவர்கள் சூறாவளிப் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக கூட்டணியில் பாஜக-வும், திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியும் உள்ளது. தங்களது கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்களையும், கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்களையும் ஆதரித்து அந்தந்த கட்சியினர் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

ஓட்டு போட வேண்டாம்


இந்நிலையில் நர்மதா என்ற பெண் ஒருவர் திருச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசருக்கு எதிராகப் பரப்புரையில் ஈடுபட்டார். அவர் நூதன பரப்புரையாக, திருச்சி ஸ்ரீரங்கம்  கோயிலுக்கு வரும் பக்தர்களின் காலணிகளைத் துடைத்து திருநாவுக்கரசருக்கு ஓட்டு போட வேண்டாம் என்று கூறினார். இதையறிந்த காங்கிரஸ் தொண்டர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தேமுதிக மற்றும் பாஜகவினர் தகராறு

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் நர்மதாவை கைது செய்தனர். இதையறிந்து அங்கு வந்த தேமுதிக மற்றும் பாஜகவினர் நர்மதாவை விடுவிக்கக்கோரி தகராறு செய்தனர். இதை தொடர்ந்து போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையில் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


நர்மதா ஏற்கெனவே மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் வீட்டில் நண்டு விடும் போராட்டத்தில் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo








Live Tv










கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.