தமிழர் பொருளாதாரக் கட்டமைப்புக்கு தென்னிலங்கை அரசியல்வாதிகள் தடை!!

வடக்கு – கிழக்கில் தமிழர்களுக்கான உறுதியான பொருளாதாரக் கட்டமைப்பு ஏற்படுத்திவிடக்கூடாது என்பதில், தென்னிலங்கை அரசியல்வாதிகள் உறுதியாக இருக்கிறார்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்தார்.
முல்லைத்தீவில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற அன்னை பூபதியின் நினைவுநாள் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்த வெளியிட்ட அவர், வடக்கு கிழக்கில் நிரந்தரமாக அபிவிருத்தியை ஏற்படுத்திக்கொடுக்கும் திட்டங்கள் யுத்தம் முடிவடைந்து 10 வருடங்கள் கடந்த நிலையிலும் தற்போதுவரை முன்னெடுக்கப்படவில்லையென சுட்டிக்காட்டினார்.

வடக்கு கிழக்கில் முன்னர் காணப்பட்ட நிறுவனங்கள் தற்போது இல்லை என்றும் தென்னிலங்கையிலிருந்தே இங்கு மரக்கரி உட்பட அனைத்து பொருட்களும் வருகின்றது. எனவே உறுதியான பொருளாதாரக் கட்டமைப்பு ஏற்படுத்திவிடக்கூடாது என்பதில், தென்னிலங்கை அரசியல்வாதிகள் உறுதியாக இருக்கிறார்களென அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் தேசியம் தனது இருப்பையும் அடையாளத்தையும் தக்கவைத்துக்கொள்ளவேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.