ஜோஜ் பவட்-த.தே.ம. முன்னணியின் சுரேஸ் சந்திப்பு!!

ஜோஜ் பவட் - தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு அமைப்பாளர் சுரேஸ் சந்திப்பு சம கால அரசியல் சம்பந்தமாக கலந்தாய்வு  இடம்பெற்றது.


பிரான்ஸ் நாட்டின் முன்னாள் அமைச்சரும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான மேரி ஜோஜ் பவட் அவர்களை (11/04/209) அன்று அவரது உத்தியோகபூர்வ அலுவலகத்தில் சந்தித்து இலங்கையில் சர்வதேச சமூகத்தின் ஆதரவுடன் கடந்த 70 வருடங்களாக தமிழர்கள்மீது திட்டமிட்ட முறையில் கட்டவிழ்த்துள்ளகட்டமைப்புசார் இனவழிப்பு 
நடவடிக்கைகளுக்கு சர்வதேசம் துணைபோகின்றமை அதனைதடுத்து நிறுத்த பிரான்ஸ் அரசு முன்வரவேண்டும் என்பதையும் ஐரோப்பாவின் முக்கியமான நாடுகளில் பிரான்ஸ் முன்னிலை வகிக்கின்றன எனவே பிரான்ஸ் எடுக்கும் தீர்மானத்திற் த்கு மற்றைய நாடுகள் செவிமடுக்கும் என்பதையும் கருத்திற்கொண்டு அது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

மேலும் இச்சத்திப்பில் சர்வதேசமட்டத்தில் இலங்கை அரசு தமிழர்களுக்கெதிராக திட்டமிட்டு மேற்கொண்டு வருவகின்ற பொய்ப்பிரச்சாரசத்தை முறியடிக்கும் விதமான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்பதையும் தொடர்ச்சியாக தமிழர் நலன் சார்ந்து தமது செயற்பாடு இருக்குமெனவும் எம்மிடம் தெரிவித்தார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.