கனடாவுக்கு போதைப் பொருட்கள் மெக்சிக்கோவிலிருந்து கடத்தல்!!

மெக்சிக்கோவில் இருந்து அமெரிக்கா ஊடாக கனடாவுக்கு மில்லியன் கணக்கான பெறுமதியுடைய போதைப் பொருட்களை கடத்திவந்த கும்பலை, ஒன்ராறியோ மாகாண பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பெருந்தொகை கனேடிய டொலர்கள் குறித்த மூன்று நபர்களிடையே பண்டமாற்றப்படுவது குறித்த தகவல் கிடைத்ததை அடுத்து, கடந்த 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திலேயே குறித்த இந்த குழு தொடர்பிலான விசாரணைகளை ஆரம்பித்தன் அடிப்படையில், இந்த கைது இடம்பெற்றது.

குறித்த விசாரணைகளின் தொடர்ச்சியாக குறித்த நபர்கள் சட்டவிரோத போதைப் பொருட்களை மத்திய மற்றும் மேற்கு ஒன்ராறியோ பகுதிக்குள்ளும், ரொறன்ரோ பெரும்பாகத்தினுள்ளும் கடத்தி வருவது குறித்த ஆதாரங்கள் கிடைத்ததாகவும் பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

இச்சம்பவத்தில், இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாகவும், குறித்த இந்த விசாரணை நடவடிக்கையில் இதுவரை எட்டு இலட்சம் கனேடிய டொலர்கள் ரொக்கப் பணமாக கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன் பிக்கப் ரக வாகனம் ஒன்று, இணைப்பு கொள்கலனுடனான கனரக வாகனம் ஒன்று, வீதிகளற்ற பகுதிகளிலும் பயன்படுத்தக்கூடிய வாகனங்கள் இரண்டு என்பனவும் கைப்பற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.