வவுனியா சிறைச்சாலைக்கு ஐ.நா. அதிகாரிகள் விஜயம்!!

சித்திரவதைக்கு எதிரான ஐ.நா. உபகுழுவின் பிரதிநிதிகள் வவுனியா சிறைச்சாலைக்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளனர்.
ஐந்து பேர் அடங்கிய குறித்த குழுவினர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இந்த விஜயத்தை மேற்கொண்டிருந்தனர்.

வவுனியா சிறைச்சாலைக்குச் சென்ற ஐ.நா. அதிகாரிகள், சிறைச்சாலையில் உள்ள கைதிகளுடன் கலந்துரையாடியுள்ளனர்.
சுமார் 1 மணித்தியாலங்கள் இடம்பெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து, ஐ.நா. அதிகாரிகள் குழு அங்கிருந்து வெளியேறியுள்ளது.
இந்நிலையில் இந்த விஜயம் தொடர்பாக ஐ.நா. அதிகாரிகளிடம் ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பியபோதும் எவ்வித கருத்துக்களையும் கூற அவர்கள் மறுத்துவிட்டனர்.

சித்திரவதைக்கு எதிரான ஐ.நா. உபகுழுவின் பிரதிநிதிகள் நேற்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவை சந்தித்து கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.