விஜயதாச ராஜபக்ஷவிடம் வாக்குமூலம் பதிவு!!

முன்னாள் அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவிடம் ஜனாதிபதி ஆணைக்குழு அதிகாரிகள்  வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
நாவலையில் உள்ள அவரது வீட்டில், இன்று (புதன்கிழமை) ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் அவரிடம் விசாரணைகளை மேற்கொண்டனர்.

முன்னாள் அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவை இன்று காலை குறித்த ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

எனினும் சுகயீனம் காரணமாக தன்னால் அங்கு முன்னிலையாக முடியாது என்றும் இதன்காரணமாக தனது வீட்டில் வைத்தே வாக்குமூலம் வழங்குவதாகவும் அவர் குறித்த ஆணைக்குழுவிடம் தெரிவித்துள்ளார். அதற்கமைய அவரின் வீட்டிற்குச் சென்ற ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள், அவரிடம் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.