உள்நாட்டு விவகார அமைச்சராக பொன்சேகா!!

உள்நாட்டு விவகாரங்களுக்கான அமைச்சராக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை நியமிக்குமாறு  பரிந்துரை செய்யப்படவுள்ளது.


இந்த பரிந்துரையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் முன்வைக்க ஐக்கிய தேசியக் கட்சி முடிவு செய்துள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் அலரி மாளிகையில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற உயர்மட்டக் கூட்டத்திலேயே இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.

அதற்கமைய தனிப்பட்ட பயணமாக ஜப்பானுக்குச் செல்லும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடு திரும்பிய பின்னர், பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை இந்தப் பதவிக்கு நியமிக்குமாறு பரிந்துரைக்க தீர்மானித்துள்ளது.

சரத் பொன்சேகா உள்ளிட்ட ஆறு புதிய அமைச்சர்களை நியமிக்குமாறு ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்ய ஐக்கிய தேசியக் கட்சி ஏற்கனவே முடிவு செய்திருந்தது.

இதன்போது பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு ஒதுக்க முடிவு செய்யப்பட்ட அமைச்சுக்களுக்கு மேலதிகமாக, உள்நாட்டு விவகார அமைச்சுப் பதவியையும் வழங்க நேற்றைய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.