மோடி ஆபத்தான கருத்துக்களையே பேசி வருகின்றார் – வைகோ!!

மோடி தொடர்ந்தும் பிரசார பொதுக்கூட்டங்களில் ஆபத்தான கருத்துக்களையே பேசி வருகின்றார் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.


ஆரணியில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘நாட்டிற்கு ஆபத்து வந்து கொண்டிருக்கிறது. ஆனால் பிரதமர் மோடி தொடர்ந்து பிரசார பொதுக்கூட்டங்களில் ஆபத்தான கருத்துக்களை சொல்லி வருகிறார்.

கர்நாடகாவில் கமிஷன் ஆட்சி நடப்பதாக கூறி பிரச்சாரம் செய்கிறார். அது இங்கு பேச வேண்டிய பிரசாரம் ஆகும்.

இந்த பகுதிக்கு முக்கிய பிரச்சினையாக திண்டிவனம் – ஆரணி வழியாக ஆந்திர மாநிலம் நகரி வரை செல்லக்கூடிய ரெயில் பாதை திட்டம் கடந்த 10 ஆண்டுகாலமாக கிடப்பில் உள்ளது.

நெசவாளர்கள் நிறைந்த இந்த பகுதியில் பட்டு ஜவுளி பூங்கா அமைப்பதாக வாக்குறுதி மட்டுமே உள்ளது நடைமுறைப்படுத்தப்படவில்லை.

தமிழகத்தில் 22 சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல்கள் நடைபெறுகின்றன. அதில் உதயசூரியன் ஜெயிக்க வேண்டும் அப்போதுதான் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கைகளான விவசாயிகள் கடன் தள்ளுபடி, கல்விக் கடன் ரத்து, ஏழை எளிய நடுத்தர மக்கள் வங்கிகளில் 5 சவரன் நகை வரை கடன் பெற்றவர்களுக்கு அதனை ரத்து செய்யும் அறிவிப்பு போன்றவற்றை செயல்படுத்த முடியும்.

மேகதாது அணை கட்டப்பட்டு வருவதால் நம் பகுதிக்கு நீர் ஆதாரங்கள் வெகுவாக குறைந்துவிடும். இதுபோன்ற திட்டங்கள் தடுக்க அந்தந்த மாநிலங்களே முடிவு செய்து கொள்ளலாம் என உள்ளது அதனை மத்திய, மாநில அரசுகள் எந்த முடிவும் எடுக்காது. நாம் ஆட்சிக்கு வந்தால் மட்டுமே இந்த திட்டங்களை சாத்தியமாக மாற்ற முடியும்.

எனவே விழிப்பாக இருந்து கை சின்னத்திற்கு வாக்களித்து எம்.கே.விஷ்ணுபிரசாத்தை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுங்கள்’ என தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.