நெஞ்சை உலுக்கும் விபத்தால் சோகத்தில் மூழ்கியது மட்டக்களப்பு!!

மஹியங்கனை – பதுளை பிரதான வீதியின், மஹியங்கனை தேசிய பாடசாலைக்கு முன்னால் இடம்பெற்ற வாகன விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.


மேலும் படுகாயமடைந்த இருவர் கவலைக்கிடமான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து இன்று (புதன்கிழமை) அதிகாலை 1.35 மணியளவில் நேர்ந்துள்ளது. தனியார் பேருந்து ஒன்றும் வான் ஒன்றும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

உயிரிழந்தவர்களுள் பெண்கள் மூவரும், குழந்தைகள் மூவரும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் அவர்கள் மட்டக்களப்பு – வாழைச்சேனை பகுதியைச் சேர்ந்தவர்கள் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

வானின் சாரதி வேகக்கட்டுப்பாட்டை இழந்தமையே, இந்த விபத்துக்கான காரணம் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டு, மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். அத்தோடு சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.