அர்ஜூன் அலோசியஸ் குடும்பத்திற்கு தேயிலைத்தோட்டம்!!

மத்திய வங்கியின் பிணைமுறி மோசடியுடன் தொடர்புடைய அர்ஜூன் அலோசியஸ் குடும்பத்தினருக்கு, அரசாங்கம் 450 ஏக்கர் தேயிலை காணியொன்றை குத்தகைக்கு வழங்கியுள்ளதாக சுட்டிக்காட்டி சிங்கள ஊடகமொன்று இன்று செய்தி வெளியிட்டுள்ளது.


அந்த செய்தியில் மேலும்,

பேர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜூன் அலோசியஸ் மற்றும் அவரது தந்தை ஜெப்ரி அலோசியஸ் ஆகியோருக்கே இவ்வாறு தேயிலை தோட்டம் வழங்கப்பட்டுள்ளது.

நுவரெலியா - கந்தபொல பகுதியிலுள்ள 450 ஏக்கர் காணியே அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ளது.

30 ஆண்டுகள் குத்தகை அடிப்படையில் இந்த தேயிலை தோட்டம் வழங்கப்பட்டுள்ளதாகவும், 450 ஏக்கர் தேயிலை தோட்டம் மாதமொன்றுக்கு 8000 ரூபா என்ற அடிப்படையில் குத்தகைக்கு விடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இலங்கை பெருந்தோட்டத்துறை அமைச்சு இந்த காணியை கடந்த 2015ஆம் ஆண்டில் வழங்கியுள்ளதாக அந்த செய்தியில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.