தாக்குதலை நடத்தியவர் இந்த நபரா!!


நீர்கொழும்பு கட்டுவப்பிட்டிய கத்தோலிக்க தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டு தாக்குதலை நடத்தியவர் என சந்தேகத்தில் ஒருவரது புகைப்படம் சமூக வலை தளங்களில் பகிரப்பட்டுள்ளது.


இந்த நபரே தனது பையில்கொண்டு வந்த குண்டை கட்டுவப்பிட்டிய தேவாலயத்திற்குள் வெடிக்க செய்துள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.

மேலும் குறித்த தாக்குதல் தற்கொலை தாக்குதல் என்றும் கூறப்படுகின்றது. இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அத்தோடு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 207 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் 450 இற்கும் மேற்பட்டோர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.