குண்டு தாக்குதலில் சிக்கி உயிருக்கு போராடும் அவுஸ்திரேலிய பிரஜை!!

அண்மையில் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதலில் பாதிக்கப்பட்ட அவுஸ்திரேலிய நாட்டு பெண் பிரஜை ஒருவர் ஆபத்தான் நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.


கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ள அவர், அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அவருக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என வைத்தியர்கள் கூறியுள்ளனர்.

28 வயதான அவுஸ்திரேலிய நாட்டு பிரஜை ஒருரே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து அந்த பெண்ணின் தந்தை கருத்து வெளியிடுகையில்,

“கடந்த ஒரு மாத்திற்கு முன்னரே தனது மனைவியும், மகளும் இங்கு வந்தனர். அவர்கள் நாடு திரும்புவதற்கு இன்று மூன்று நாட்களே இருந்தன. எனினும், கிங்ஸ்பெரி விடுதியில் இடம்பெற்ற தாக்குதலில் மகள் படுகாயமடைந்துள்ளார்.

இந்நிலையில், தனது மகளை மீண்டும் மெல்பேர்னுக்கு அழைத்து சென்று சிகிச்சையளிக்க வேண்டும். இங்கு வழங்கப்படும் சிகிச்சைகளில் போதியளவு திருப்தியில்லை. ஆகையினால் அவரை மெர்பேர்னுக்கு அழைத்து செல்ல வேண்டும்.

அதற்கான நடவடிக்கைகளை தற்போது மேற்கொண்டுள்ளேன்” என குண்டு தாக்குதலில் படுகாயமடைந்த பெண்ணின் தந்தை மேலும் கூறியுள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.