இந்தோனேசியாவில் நிலநடுக்கம்!

இந்தோனேசியாவில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளது.


நுசா டெங்காரா மாகாணத்தில் 6.1 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன்காரணமாக மக்கள் பலரும் தங்களது வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்து வீதிகளில் தஞ்சம் புகுந்தனர்.

நிலநடுக்கம் காரணமாக பொது மக்களுக்கோ அல்லது சொத்துகளுக்கோ எந்தவித சேதமும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், இந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.