மானிப்பாய் பகுதியில் தேயிலை பைகள் மீட்பு!!

யாழ். மானிப்பாய் வீதியில் அமைந்துள்ள ஜும்மா மசூதியிலிருந்து பாவனைக்குதவாத பெருந்தொகையான தேயிலை மற்றும் போலி நிறுவன பெயர்களுடன் பொதிகள் மற்றும் பணம் என்பன விசேட அதிரப்படியினரால் மீட்கப்பட்டுள்ளன.


யாழ். நாவாந்துறை மற்றும் ஐந்து சந்திப் பகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிமை) இடம்பெற்ற தேடுதல் நடவடிக்கையின்போதே குறித்த பொருட்கள் கைப்பேற்றப்பட்டுள்ளன.

குறித்த பொருட்கள் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து சுகாதாரப்பிரிவினர் மற்றும் பொது சுகாதரப் பரிசோதகர்கள் அழைக்கப்பட்டனர்.  சம்பவ இடத்திற்குச் சென்ற சுகாதாரப்பிரிவினர் பொருட்களை ஆய்வு செய்ததுடன் பாவனைக்குதவாத தேயிலை மற்றும் போலி நிறுவன பெயர் பொறிக்கப்பட்ட பொதிகளையும் பொறுப்பேற்று சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

இந்தப் பொருட்கள் தற்போது பொலிஸாரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.