முன்னாள் போராளியை உடனடியாக விடுவிக்க ஜனாதிபதி நடவடிக்கை!!

வவுணதீவு பொலிஸார் கொலை வழக்கில் கைதான முன்னாள் போராளி அஜந்தனை உடனடியாக விடுவிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார்.


அந்தவகையில் அவருக்கான விடுதலை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சட்டமா அதிபருக்கு பணிப்பதாக உறுதியளித்துள்ளார் என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

தற்போது கிடைக்கப்பெற்றுள்ள புதிய தகவல்களின் அடிப்படையில், பொலிஸாரை கொலை செய்தது, தடை செய்யப்பட்ட  தேசிய தெளஹீத் ஜமாத் அமைப்பினைச் சேர்ந்த மொஹமட் சஹரான் குழுவினர் என தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் இவ்விடயத்தில் நான்கு பிள்ளைகளின் தந்தையான முன்னாள் போராளி கதிர்காமத்தம்பி ராசகுமாரன் என்ற அஜந்தனை விடுவிக்குமாறு அமைச்சர் மனோ கணேசன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கவனத்துக்கு கொண்டுவந்தார்.

இதனையடுத்து அவரை உடன் விடுவிக்க நடவடிக்கை எடுக்கும்படி பதில் பொலிஸ்மா அதிபருக்கும், சட்டமா அதிபருக்கும் பணிப்புரை விடுப்பதாக தன்னிடம் ஜனாதிபதி உறுதியளித்துள்ளதாக மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.