யாழ்ப்பாணத்தில் குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி!

கடந்த உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு யாழில் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.


யாழ்.மாவட்ட ஆயர் ஜஸ்ரின் பேர்னார்ட் ஞானப்பிரகாசம் தலைமையில் யாழ். ஆயர் இல்லத்தில் இன்று (வியாழக்கிழமை) இந்நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது அஞ்சலி நிகழ்வின் பிரதான சுடரை யாழ். ஆயர் ஏற்றிவைத்தார். அதனைத் தொடர்ந்து, யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் மற்றும் பங்குத் தந்தையர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினார்கள்.

அத்துடன் குண்டுத் தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் ஆத்ம சாந்திக்காள பிரார்த்தனைகளும் இடம்பெற்றன.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.