பாகிஸ்தான் வௌிவிவகார அமைச்சர், இலங்கை விஜயத்தை இரத்துச் செய்தார்!!

இலங்கைக்கு விஜயம் செய்யவிருந்த பாகிஸ்தானின் வௌிவிவகார அமைச்சர் மெஹமூத் குரேஷி தனது இலங்கை விஜயத்தை இரத்து செய்துள்ளார்.


பாகிஸ்தானின் வௌிவிவகார அமைச்சர்  நாளை (வெள்ளிக்கிழமை) இலங்கைக்கு விஜயம் செய்வதாக திட்டமிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் இலங்கையில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு அவர் தனது விஜயத்தை இரத்துச் செய்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் பாகிஸ்தானின் வௌிவிவகார அமைச்சரின் இலங்கை விஜயம் திட்டமிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.