இலங்கை குண்டுவெடிப்பினால் ஏற்பட்ட சோகம்!

இலங்கை குண்டு வெடிப்பில் உயிரிழந்த பிரித்தானிய சகோதரரும், சகோதரியும் இன்று அமெரிக்காவில் அடக்கம் செய்யப்பட்டுள்ளனர்.


பிரித்தானியவில் இருந்து இலங்கை வந்த டேனியல் (19) என்ற இளைஞரும் அவரின் தங்கையான அமெலியும்(15) உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற இலங்கை குண்டு வெடிப்பில் பலியாகியுள்ளனர்.

இருவரும் ஐந்து மாதங்களுக்கு முன்னர் ஓடி விளையாடிய கலிபோர்னியாவின் நியூபோர்ட் கடற்கரையின் அருகிலேயே புதைக்கப்பட்டுள்ளனர்.


இறுதியாக கிறிஸ்துமஸ் விடுமுறையை அவர்கள் கலிபோர்னியாவின் நியூபோர்ட் கடற்கரையில்தான் கொண்டாடியுள்ளனர்.

இதேவேளை, அவர்களது தந்தை அமெரிக்காவில் பிறந்தவர் என்பதோடு, டேனியலும், அமெலியும் அமெரிக்க மற்றும் பிரித்தானிய இரட்டைக் குடியுரிமையுடையவர்கள் என்பதாலும் அமெரிக்காவில் அடக்கம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.