யாழ். நீதிவான் நீதிமன்றதிலிருந்து முன்னாள் பாதுகாப்பு செயலாளருக்கு அழைப்பு!!

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தால் அழைப்புக் கட்டளை அனுப்பப்பட்டுள்ளது.


நபர் ஒருவர் காணாமல் போன சம்பவம் தொடர்பில் சாட்சியம் அளிப்பதற்காக அவருக்கு இந்த அழைப்பு கட்டளை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் கோத்தபாய ராஜபக்ஷ நீதிமன்றில் ஆஜராகவில்லை.

நாட்டில் காணப்படுகின்ற பாதுகாப்பு நிலையை கருத்திற் கொண்டு சாட்சியமளிப்பதற்கு இன்று நீதிமன்றில் ஆஜராக முடியாதுள்ளதாகவும், வேறு ஒரு தினம் வழங்குமாறும் கோத்தபாய ராஜபக்ஷ சார்பில் ஆஜராகியிருந்த சட்டத்தரணி நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.