கனரக வாகனங்கள் உள் நுழைய யாழில் தடை!!
யாழ். மாநகர எல்லைப் பகுதிக்குள் கனரக வாகனங்கள் நுழைவதற்கு முற்றாக தடை விதிக்கப்படுவதாக யாழ். மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட் தெரிவித்துள்ளார்.
பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பு ஏற்பாடுகள் கருதி பாடசாலை ஆரம்பிக்கும் நேரமும், விடுகை நேரமும் கனரக வாகனங்கள் நுழைவதற்கு முற்றாக தடை விதிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போதுள்ள நெருக்கடியான சூழலில் எமது எதிர்கால சந்ததியான மாணவர்களின் கல்விச் செயற்பாடுகள் பாதிப்படைவதனை அனுமதிக்க முடியாத நிலையில் இன்று முதல் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இதன்போது மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகளிற்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் வாகன உரிமையாளர்களின் ஒத்துழைப்பு இன்றியமையாத ஒன்றாகின்றது.
இதன்போது மாநகர எல்லைக்குள் அதிக பாடசாலைகளும், அதிக மாணவர்களும் கொண்ட பகுதியாக உள்ள நிலையில் நில முன்னேற்பாடுகளை மேற்கொள்ள வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
இதன்டிப்படையில் பாடசாலை நாட்களில் காலை 7 மணி முதல் 8 மணி வரையிலும், மதியம் 1 மணி முதல் 2 மணி வரையும் மாநகர எல்லைப் பகுதிக்குள் பார ஊர்திகள், கண்டர்கள், டிப்பர்கள், இரு சக்கர உழவு இயந்திரங்கள், சுற்றுலாப் பேருந்துகள் மற்றும் வடி வகை வாகனங்கள் எவையும் உட் பிரவேசிக்கவோ அல்லது வீதியோரம் நிறுத்தி வைப்பதற்கோ தடை விதிக்கப்படுகின்றது.
இவ் அறிவித்தலை மீறிச் செயல்படும் வாகனங்கள் மீது உரிய நடவடிக்கை சட்டத்தின் பால் மேற்கொள்ளும் உரித்தினை பொலிஸார் மேற்கொள்வர்.
எனவே சட்ட நெருக்கடியை தவிர்க்கும் வகையில் இவ் அறிவித்தலை நடைமுறைப்படுத்தி மாணவர்களின் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளிற்கு ஒத்துழைக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo
பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பு ஏற்பாடுகள் கருதி பாடசாலை ஆரம்பிக்கும் நேரமும், விடுகை நேரமும் கனரக வாகனங்கள் நுழைவதற்கு முற்றாக தடை விதிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போதுள்ள நெருக்கடியான சூழலில் எமது எதிர்கால சந்ததியான மாணவர்களின் கல்விச் செயற்பாடுகள் பாதிப்படைவதனை அனுமதிக்க முடியாத நிலையில் இன்று முதல் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இதன்போது மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகளிற்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் வாகன உரிமையாளர்களின் ஒத்துழைப்பு இன்றியமையாத ஒன்றாகின்றது.
இதன்போது மாநகர எல்லைக்குள் அதிக பாடசாலைகளும், அதிக மாணவர்களும் கொண்ட பகுதியாக உள்ள நிலையில் நில முன்னேற்பாடுகளை மேற்கொள்ள வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
இதன்டிப்படையில் பாடசாலை நாட்களில் காலை 7 மணி முதல் 8 மணி வரையிலும், மதியம் 1 மணி முதல் 2 மணி வரையும் மாநகர எல்லைப் பகுதிக்குள் பார ஊர்திகள், கண்டர்கள், டிப்பர்கள், இரு சக்கர உழவு இயந்திரங்கள், சுற்றுலாப் பேருந்துகள் மற்றும் வடி வகை வாகனங்கள் எவையும் உட் பிரவேசிக்கவோ அல்லது வீதியோரம் நிறுத்தி வைப்பதற்கோ தடை விதிக்கப்படுகின்றது.
இவ் அறிவித்தலை மீறிச் செயல்படும் வாகனங்கள் மீது உரிய நடவடிக்கை சட்டத்தின் பால் மேற்கொள்ளும் உரித்தினை பொலிஸார் மேற்கொள்வர்.
எனவே சட்ட நெருக்கடியை தவிர்க்கும் வகையில் இவ் அறிவித்தலை நடைமுறைப்படுத்தி மாணவர்களின் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளிற்கு ஒத்துழைக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo
கருத்துகள் இல்லை