சிங்கப்பூர் பயணமாகிறது இலங்கையின் சமுத்ரா !!

சர்வதேச கடல்சார் பாதுகாப்பு கண்காட்சி இம்மாதம் 12 திகதி முதல் 17 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.


இந்த கண்காட்சியில், 33 நாடுகளின் கடற்படைகள் பங்கேற்கவுள்ள நிலையில், இலங்கை சார்பாக சமுத்ரா கப்பல் சிங்கப்பூருக்கான பயணத்தை ஆரம்பித்துள்ளது.

இந்த கப்பல் நேற்று (திங்கட்கிழமை) திருகோணமலை துறைமுகத்திலிருந்து தனது பயணத்தை ஆரம்பித்தது. இதில் 17 கடற்படை அதிகாரிகள்  உள்ளடங்கலாக 154 கடற்படையினர் செல்கின்றனர்.

சர்வதேச கடல்சார் பாதுகாப்பு கண்காட்சி நிறைவடைந்து வரும் 17ஆம் திகதி சமுத்ரா கப்பல் மீண்டும் இலங்கைக்கு திரும்பும் என கடற்படை ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.