எழுவர் விடுதலையை காலந்தாழ்த்தாது செய்யுங்கள்!! அற்புதம்மாள்!!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைக்கைதிகளாக தண்டனை அனுபவித்துவரும் ஏழுபேரின் விடுதலை குறித்து அரசு இனியும் காலம் தாழ்த்தக்கூடாது என பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் தெரிவித்துள்ளார்.


ஏழுபேரின் விடுதலைக்கு எதிரான மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ள நிலையில், இன்று (வியாழக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து மேலும் தெரிவித்த அவர், “பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரும் 28 ஆண்டுகளாக சிறையில் உள்ளனர். அவர் பற்றிய உண்மைகள் வெளிவந்த பிறகும் கூட சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

உன் மகனை உன்னிடம் கொண்டு வந்து சேர்ப்பேன் என முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவரின் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் ஆளுநர் உடனடியாக கையெழுத்திட்டு ஏழுபேரையும் விடுதலை செய்யவேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.