இலங்கை குழு அமெரிக்காவிற்கு பயணம்!!

பயங்கரவாத முறியடிப்பு குறித்து அமெரிக்க இராஜாங்கச் செயலர் மைக்கேல் றிச்சர்ட் பொம்பியோ தலைமையிலான குழுவுக்கும் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன தலைமையிலான குழுவுக்கும் இடையில் உயர்மட்டப் பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளன.


இந்த பேச்சுவார்த்தைகள் எதிர்வரும் வியாழக்கிழமை அமெரிக்காவில் இடம்பெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுக்குப் பின்னர் நடைபெறும் இந்தப் பேச்சுக்களில் பிரதானமாக பயங்கரவாத முறியடிப்பு, பாதுகாப்பு மற்றும் ஒருங்கமைக்கப்பட்ட நாடுகடந்த குற்றங்கள் உள்ளிட்ட விடயங்களில் முக்கிய கவனம் செலுத்தப்படவுள்ளது.

இந்தப் பேச்சுக்களின்போது இரண்டு நாடுகளினதும் அதிகாரிகள் மற்றும் பிரதிநிதிகள் இந்தோ-பசுபிக் மூலோபாயம், இலங்கை மற்றும் ஆசியப் பிராந்தியம், இராணுவ உறவுகள், வருகைப் படைகள் உடன்பாடு மற்றும் இலங்கையின் அமைதிகாப்புக்கான உதவி, கண்ணிவெடிகளை அகற்றும் ஆற்றல்கள் உள்ளிட்ட விடயங்கள் குறித்தும் கலந்துரையாடுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்த பின்னர் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன மெக்சிக்கோவுக்கு சென்று அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சர் மார்சிலோ எப்ராட்டைச் சந்தித்துப் கலந்துரையாடவுள்ளார்.

திலக் மாரப்பன தலைமையிலான இந்தக் குழு வரும் செவ்வாய்க்கிழமை அமெரிக்காவுக்குப் பயணிக்கவுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.