பிலிப்பைன்ஸில் நாளை இடைத்தேர்தல்!!

பிலிப்பைன்ஸில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.


பிலிப்பைன்ஸில் நாளை(திங்கட்கிழமை) நடைபெறவுள்ள இடைத்தேர்தல் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது.

இடைத்தேர்தலை முன்னிட்டு ஆயுதப்படையினர் அங்கு சிவப்பு எச்சரிக்கை நிலையை பிரகடனம் செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பிலிப்பைன்ஸிலுள்ள சுமார் 1,200 பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், ஒரு இலட்சத்திற்கும் அதிகமான படையினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன், வன்முறைகள் இடம்பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படும் மிண்டனாவ் தீவின் தென் பகுதி உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவான படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, நாளைய தினம் இடம்பெற்றவுள்ள இடைத்தேர்தல் பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியின் ஆட்சி அதிகாரத்தினை மேலும் பலப்படுத்த உதவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.