மீண்டும் சர்ச்சையில் சிக்கிய மோடி!!
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் கொல்லப்பட்டத்துக்குப் பதிலடிக் கொடுக்கும் விதமாகப் பாகிஸ்தானின் பால்கோட் பகுதியில் இந்திய விமானப்படைத் தாக்குதல் நடத்தியது.
இதில் ஜெயிஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்த பலர் உயிரிழந்ததாகக் கூறப்பட்டது. இது பற்றி நியூஸ் நேஷன் என்ற ஊடகத்துக்குப் பேட்டியளித்திருந்த பிரதமர் மோடி, “பால்கோட்டில் தாக்குதல் நடத்தப்பட்ட அன்றைய தினம் வானிலை சற்று மோசமாக இருந்தது. தாக்குதலை வேறு நாள் வைத்துக்கொள்ளலாம் என வல்லுநர்கள் தெரிவித்தனர். ஆனால், நான்தான் மேகங்கள் நம்மை ரேடார்களின் பார்வையிலிருந்து காக்கும் என அறிவுறுத்தினேன்" என்று பேசியிருந்தார்.
ஆனால், மோடி கூறியது தவறான கருத்து என்பதால் அவரை நெட்டிசன்கள் சரமாரியாகக் கலாய்த்து வருகின்றனர். இதற்கிடையில் அதே பேட்டியில் பிரதமர் வேறு ஒரு கருத்தையும் தெரிவித்துள்ளார். தற்போது அதுவும் வைரலாகிவருகிறது. அதில், “1987-88-ம் ஆண்டுகளில் நான் டிஜிட்டல் கேமரா பயன்படுத்தினேன். அந்த நேரத்தில் அத்வானியின் பிரசாரம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. என்னிடம் இருந்த கேமராவில் அத்வானியைப் படம் பிடித்து அதை மெயில் மூலம் டெல்லிக்கு அனுப்பினேன். அந்தப் போட்டோ பிரின்ட் செய்யப்பட்டதும் அதைப் பார்த்த அத்வானி மிகவும் பிரமிப்படைந்தார். எவ்வாறு இந்தப் புகைப்படத்தை வண்ணமாக எடுத்தாய் என என்னிடம் கேட்டார்’ இவ்வாறு பேசியுள்ளார்.
இதிலும் பிரதமர் மோடி தவறான கருத்தையே குறிப்பிட்டுள்ளார் என சமூகவலைதளங்களில் கருத்து பதிவிட்டு வருகின்றனர். 1973-ம் ஆண்டு அமெரிக்காவின் பாதுக்காப்புப் படையினர்தான் முதல்முதலாக இ-மெயிலைப் பயன்படுத்தினர். அது அவர்களுக்குள்ளே சிறிய அளவிலான பரிமாற்றமாக இருந்தது. பிறகு, 1990 முதல் 1995-ம் ஆண்டுகளில் இணையதளம் வெளியான பிறகு, பொதுமக்களும் இ-மெயில் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். ஆனால், அது தொடங்கப்படுவதற்கு முன்பே மோடி எப்படி அதைப் பயன்படுத்தியிருக்க முடியும் என நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo
இதில் ஜெயிஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்த பலர் உயிரிழந்ததாகக் கூறப்பட்டது. இது பற்றி நியூஸ் நேஷன் என்ற ஊடகத்துக்குப் பேட்டியளித்திருந்த பிரதமர் மோடி, “பால்கோட்டில் தாக்குதல் நடத்தப்பட்ட அன்றைய தினம் வானிலை சற்று மோசமாக இருந்தது. தாக்குதலை வேறு நாள் வைத்துக்கொள்ளலாம் என வல்லுநர்கள் தெரிவித்தனர். ஆனால், நான்தான் மேகங்கள் நம்மை ரேடார்களின் பார்வையிலிருந்து காக்கும் என அறிவுறுத்தினேன்" என்று பேசியிருந்தார்.
ஆனால், மோடி கூறியது தவறான கருத்து என்பதால் அவரை நெட்டிசன்கள் சரமாரியாகக் கலாய்த்து வருகின்றனர். இதற்கிடையில் அதே பேட்டியில் பிரதமர் வேறு ஒரு கருத்தையும் தெரிவித்துள்ளார். தற்போது அதுவும் வைரலாகிவருகிறது. அதில், “1987-88-ம் ஆண்டுகளில் நான் டிஜிட்டல் கேமரா பயன்படுத்தினேன். அந்த நேரத்தில் அத்வானியின் பிரசாரம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. என்னிடம் இருந்த கேமராவில் அத்வானியைப் படம் பிடித்து அதை மெயில் மூலம் டெல்லிக்கு அனுப்பினேன். அந்தப் போட்டோ பிரின்ட் செய்யப்பட்டதும் அதைப் பார்த்த அத்வானி மிகவும் பிரமிப்படைந்தார். எவ்வாறு இந்தப் புகைப்படத்தை வண்ணமாக எடுத்தாய் என என்னிடம் கேட்டார்’ இவ்வாறு பேசியுள்ளார்.
இதிலும் பிரதமர் மோடி தவறான கருத்தையே குறிப்பிட்டுள்ளார் என சமூகவலைதளங்களில் கருத்து பதிவிட்டு வருகின்றனர். 1973-ம் ஆண்டு அமெரிக்காவின் பாதுக்காப்புப் படையினர்தான் முதல்முதலாக இ-மெயிலைப் பயன்படுத்தினர். அது அவர்களுக்குள்ளே சிறிய அளவிலான பரிமாற்றமாக இருந்தது. பிறகு, 1990 முதல் 1995-ம் ஆண்டுகளில் இணையதளம் வெளியான பிறகு, பொதுமக்களும் இ-மெயில் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். ஆனால், அது தொடங்கப்படுவதற்கு முன்பே மோடி எப்படி அதைப் பயன்படுத்தியிருக்க முடியும் என நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo
கருத்துகள் இல்லை