அமெரிக்காவிற்கு சீனா பதிலடி!!
இருதரப்பு வர்த்தக போரை மேலும் விரிவடையச் செய்யும் வகையில் அமெரிக்காவிற்கு பதிலடி கொடுக்கப் போவதாக சீனா அறிவித்துள்ளது.
அதன்படி அமெரிக்காவின் 60 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பொருட்கள் மீது புதிய தீர்வை கட்டணங்களை விதிக்கவுள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.
இந்த புதிய தீர்வை கட்டணங்கள் எதிர்வரும் ஜுன் மாதம் முதலாம் திகதி முதல் அமுல்படுத்தப்படும் என்றும் சீனா கூறியுள்ளது.
200 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான சீன இறக்குமதிகள் மீதான தீர்வை கட்டணங்களை அமெரிக்கா இரட்டிப்பாக அதிகரித்தது. அமெரிக்காவின் இந்த அதிரடி செயற்பாடு இடம்பெற்று மூன்று தினங்களின் பின்னரே சீனாவின் இவ்வறிவிப்பு வெளியாகியுள்ளது.
தீர்வை கட்டணங்கள் உயர்த்தப்படக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சீனாவிற்கு எச்சரிக்கை விடுத்திருந்தார். ஆனால், தமது நலன்களை பாதிக்கும் எவ்வித செயற்பாடுகளையும் பொறுத்துக் கொள்ளப் போவதில்லை என பீஜிங் தெரிவித்துள்ளது.
அதன்படி, அமெரிக்காவின் 5 ஆயிரத்திற்கும் அதிகமான பொருட்கள் மீதான தீர்வை கட்டணங்களை 5 முதல் 25 வீதம் வரை உயர்த்த சீனா நடவடிக்கை எடுத்துள்ளது.
மாட்டிறைச்சி, ஆடு மற்றும் பன்றி இறைச்சி உற்பத்திகள், பழ வகைகள், பழச்சாறு, சமையல் எண்ணெய், தேயிலை மற்றும் கோப்பி உள்ளிட்ட பொருட்கள் சீனாவின் வரி விதிப்பிற்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே ஏற்கனவே காணப்பட்ட முரண்பாடுகள் நீங்கி, வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதற்கான சாத்தியங்கள் நிலவி வந்த நிலையிலேயே மீண்டும் இருதரப்பிற்கிடையே பதற்றம் அதிகரித்துள்ளது.
இருதரப்பிற்கும் இடையில் அதிகரித்துள்ள பதற்றம் காரணமாக பங்குச் சந்தைகளிலும் பாரிய வீழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo
அதன்படி அமெரிக்காவின் 60 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பொருட்கள் மீது புதிய தீர்வை கட்டணங்களை விதிக்கவுள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.
இந்த புதிய தீர்வை கட்டணங்கள் எதிர்வரும் ஜுன் மாதம் முதலாம் திகதி முதல் அமுல்படுத்தப்படும் என்றும் சீனா கூறியுள்ளது.
200 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான சீன இறக்குமதிகள் மீதான தீர்வை கட்டணங்களை அமெரிக்கா இரட்டிப்பாக அதிகரித்தது. அமெரிக்காவின் இந்த அதிரடி செயற்பாடு இடம்பெற்று மூன்று தினங்களின் பின்னரே சீனாவின் இவ்வறிவிப்பு வெளியாகியுள்ளது.
தீர்வை கட்டணங்கள் உயர்த்தப்படக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சீனாவிற்கு எச்சரிக்கை விடுத்திருந்தார். ஆனால், தமது நலன்களை பாதிக்கும் எவ்வித செயற்பாடுகளையும் பொறுத்துக் கொள்ளப் போவதில்லை என பீஜிங் தெரிவித்துள்ளது.
அதன்படி, அமெரிக்காவின் 5 ஆயிரத்திற்கும் அதிகமான பொருட்கள் மீதான தீர்வை கட்டணங்களை 5 முதல் 25 வீதம் வரை உயர்த்த சீனா நடவடிக்கை எடுத்துள்ளது.
மாட்டிறைச்சி, ஆடு மற்றும் பன்றி இறைச்சி உற்பத்திகள், பழ வகைகள், பழச்சாறு, சமையல் எண்ணெய், தேயிலை மற்றும் கோப்பி உள்ளிட்ட பொருட்கள் சீனாவின் வரி விதிப்பிற்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே ஏற்கனவே காணப்பட்ட முரண்பாடுகள் நீங்கி, வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதற்கான சாத்தியங்கள் நிலவி வந்த நிலையிலேயே மீண்டும் இருதரப்பிற்கிடையே பதற்றம் அதிகரித்துள்ளது.
இருதரப்பிற்கும் இடையில் அதிகரித்துள்ள பதற்றம் காரணமாக பங்குச் சந்தைகளிலும் பாரிய வீழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo
கருத்துகள் இல்லை