கனடா உச்ச நீதிமன்றம் முதல் முறையாக இடம் மாறி வரலாற்றில் பதிவாகிறது!!

கனடா நாட்டின் ஒட்டாவாவில் தற்போது செயல்பட்டுவரும் உச்ச நீதிமன்றம் முதல் முறையாக Winnipeg நகருக்கு இடமாறவுள்ளதாக கனடாவின் தலைமை நீதிபதி ரிச்சர்ட் வாக்னர் தெரிவித்துள்ளார்.


கனடாவின் உச்ச நீதிமன்றம் வின்னிபெக்கிற்கு இரண்டு முறையீட்டு வழக்குகளை விசாரிக்க செப்டம்பர் 25, 26 ஆகிய இரு தினங்கள் வருவதாக நீதிபதி ரிச்சர்ட் வாக்னர் இன்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், உச்சநீதிமன்றம் உங்கள் நீதிமன்றம் என்பதால், அனைத்து கனடியர்களுக்கும் எங்களுக்கு மிகவும் அணுகத்தக்கதாக இருப்பது முக்கியம் என்று அவர் கூறினார்.

மக்கள் நீதிமன்றத்தின் செயல்பாட்டை நேரடியாக பார்க்க இது ஒரு வாய்ப்பாக இருக்கும். வின்னிபெக்கிற்கு செல்ல நாங்கள் மிகவும் ஆர்வமாக உள்ளோம்.

அனைத்து மக்களுக்கும் நீதி, நீதிமன்றங்களை எளிதில் அணுக முடியும் என்பதை உறுதி செய்யும் விதமாக இந்த முடிவு எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.

மேலும் இதன்போது நீதிமன்றம் ஒரு பொது நிகழ்ச்சியை நடத்தும். அதில் மாண்வர்கள், சட்ட பணியாளர்கள் மற்றும் அந்தப் பகுதி மக்கள் ஆகியோர் பங்கெடுக்கவுள்ளனர் எனவும் கனடாவின் தலைமை நீதிபதி ரிச்சர்ட் வாக்னர் தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.