அரசியல் கட்சிகளின் முக்கியஸ்தர்களுக்கும் வன்முறைகளுடன் தொடர்பு!!

வடமேல் மாகாணம் மற்றும் மினுவங்கொடை பிரதேசங்களில் நடந்த வன்முறைகள் நன்றாக திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளதுடன் அதன் பின்னணியில் சில சில அரசியல் கட்சிகளை சேர்ந்த முக்கியஸ்தர்கள் சம்பந்தப்பட்டுள்ள கிடைத்துள்ள புலனாய்வு தகவல் சம்பந்தமாக உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க, பாதுகாப்பு தரப்பினருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.


வன்முறைகளுடன் தொடர்புடைய சகலருக்கு எதிராக தகுதி தராதரம் பாராது நடவடிக்கை எடுக்குமாறும் பிரதமர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

இது சம்பந்தமான புலனாய்வுப்பிரிவின் அறிக்கை ஜனாதிபதி செயலகம், பிரதமர் மற்றும் பாதுகாப்பு அமைச்சு உட்பட முக்கியஸ்தர்களுக்கு கடந்த 15 ஆம் திகதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.