எழுச்சி நாளாகட்டும் இந்நாள்!! அருட்தந்தை சக்திவேல்!!

முள்ளிவாய்க்கால் நினைவு நாளான இன்றைய எழுச்சி நாள் வெற்றி நாளாக அமைய வேண்டுமென சமூக செயற்பாட்டாளர் அருட்தந்தை சக்திவேல் தெரிவித்துள்ளார்.


இறுதி யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளை நினைவுகூறும் நிகழ்வுகள் இன்று (சனிக்கிழமை) முள்ளிவாய்க்கால் முன்றலில் இடம்பெற்றன.

இந்த நிகழ்வில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தினர். இதன்போது ஆதவன் செய்தி சேவைக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின்போது கொல்லப்பட்டவர்களின் இரத்தம், சதை, உயிர், உடல் என அனைத்தும், இன்றைய தினத்தை எழுச்சி நாள் என தற்போதும் கூறிக்கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

எனவே அந்த எழுச்சிநாள் வெற்றிநாளாக அமைய உறுதியாக செயற்படுவதோடு கட்டமைப்புடன் செயற்பட வேண்டுமென்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.