முள்ளிவாய்க்கால் நினைவுகூரலை உணர்வுடன் அனுஸ்டித்தது கிளிநொச்சி!!

முள்ளிவாய்க்கால் படுகொலையை நினைவுகூரும் முகமாக கிளிநொச்சியில் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.


இறுதி யுத்தத்தில் உயிரிழந்த ஈழத்தமிழர்களை நினைவுகூரும் முகமாக முள்ளிவாய்க்காலில் இன்று (சனிக்கிழமை) நினைவுகூரல் நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.

இதனை முன்னிட்டே கிளிநொச்சி நகர், சேவை சந்தைகள் உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

முள்ளிவாய்க்கால் நினைவுகூரலை உணர்வுபூர்வமாக கடைப்பிடிக்கும் வகையில் இவ்வாறு கடைகள் அடைக்கப்பட்டு வர்த்தகர்களும் தமது ஆதரவினை வழங்கியுள்ளனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.