சந்தேகத்துக்கு இடமாக நடமாடிய இருவர் கைது!

யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் சந்தேகத்துக்கு இடமாக நடமாடிய குற்றச்சாட்டில் முஸ்லிம் இனத்தவர் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.


குறித்த இருவரும் நேற்று  (வெள்ளிக்கிழமை) யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கொக்குவில் கேணியடியில் சந்தேகத்துக்கு இடமாக இருவர் நடமாடுவது குறித்து யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு நேற்று தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், குறித்த இருவரையும் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

சந்தேகநபர்கள் இருவரும் ஓட்டுமடத்தில் வசிப்பதாகத் தெரிவித்த போதும், கொக்குவிலில் நடமாடியமைக்கான காரணத்தை தெரிவிக்காததால் கைது செய்யப்பட்டனர்.

இதையடுத்து இன்று நீதிமன்றில் சந்தேகநபர்கள் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், சந்தேகநபர் சார்பாக கோரப்பட்ட பிணை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதுடன் அவர்களை வரும் 24ஆம் திகதிவரை விளக்கமறியலில் கைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.