இலங்கையில் விரைவில் நடைமுறைக்கு வரவுள்ள சட்டம்!!
விரைவில் இது தொடர்பான சட்டதிட்டங்களை இலங்கையில் முறையாக நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளார்.
தேசிய இரத்தினக்கல், ஆபரண அதிகாரசபையில் நேற்றைய தினம் ஜனாதிபதி தலைமையில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. இதில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே மேற்படி விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கூறுகையில், தரச் சான்றிதழ் இல்லாத ஆபரண விற்பனையானது சந்தையில் பரவலாக இடம்பெற்று வருகிறது.
இதன் காரணமாகவே ஆபரணங்களை விற்பனை செய்யும் போது தேசிய இரத்தினக்கல், ஆபரண அதிகாரசபையின் தரச்சான்றிதழ் முத்திரையை பெற்றுக் கொள்வதை கட்டாயமாக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
விரைவில் இது தொடர்பான சட்டம் முறையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo
கருத்துகள் இல்லை