பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய வங்கி கணக்குகள் முடக்கம் !!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்களின் 41 வங்கி கணக்குகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேக கூறியுள்ளார்.


குற்றப் புலனாய்வுப் பிரிவு மற்றும் பயங்கரவாத தடுப்பு பிரிவினரின் பொறுப்பில் உள்ள சில சந்தேகநபர்களின் வங்கிக் கணக்குகளாக இவை அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த வங்கிக் கணக்குகளில் 134 மில்லியன் ரூபாய் பணம் வைப்பிலிருப்பது தெரியவந்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேக தெரிவித்துள்ளார்.

மேலும் 14 மில்லியன் ரூபாய் பெறுமதியான சந்தேகநபர்களின் சொத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அத்தோடு 7 பில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்றுவருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேக கூறியுள்ளார்.

கடந்த மாதம் 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறன்று இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடைய பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

அத்தோடு அவர்களிடம் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதோடு, அவர்களின் சொத்து விபரங்களும் ஆராயப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.