தாக்குதலுக்கான3தேவாலயங்களை புனரமைக்க 25 மில்லியன் ரூபாய் ஒதுக்கிடு!!

தற்கொலை குண்டு தாக்குதலில் சேதமடைந்த மூன்று தேவாலயங்கள் புனரமைக்கப்படவுள்ளது. பிரதமரின் ஆலோசனையின் பேரில் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


 இதற்கான அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது என தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள் குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு மாகாண அபிவிருத்தி, தொழில் பயிற்சி,

திறன் அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சின் செயலாளர் வி.சிவஞானசோதி தெரிவித்தார். புனரமைப்புப் பணிகளுக்காக முதற் கட்டமாக

மட்டக்களப்பு சியோன் தேவாலயத்திற்கு 5 மில்லியன் ரூபாவும், நீர்கொழும்பு கட்டுவாபிட்டிய தேவாலயத்திற்கு 10 மில்லியன் ரூபாவும் வழங்கப்பட்டுள்ளதாகவும்

இந்த இரு தேவாலயங்களின் புனரமைப்பு பணிகள் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தை கடற்படை புனரமைக்கவுள்ளதாகவும் அதற்காக முதற் கட்டமாக 10 மில்லியன் ரூபா நிதி வழங்கப்பட்டுள்ளதாகவும்

தெரிவித்த அமைச்சின் செயலாளர் வி.சிவஞானசோதி புனரமைப்புப் பணிகளுக்கு தேவையான நிதி மதிப்பீடு செய்யப்பட்ட பின்னர் முழுமையான நிதி வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.