யாழில் இலவச கண் சத்திரசிகிச்சை ஆரம்பம்!!

இலவச கண் சத்திரசிகிச்சை யாழில் ஆரம்பமாகி நடைபெற்றுவருகிறது.


கண் சத்திர சிகிச்சை நிபுணர் வைத்தி கலாநிதி சந்திரகுமாரின் ஏற்பாட்டில் எம்.ஐ.ரி நிறுவனத்தினருடன் இணைந்து நடாத்தும் இலவச கண்சத்திரசிகிச்சை இன்று (சனிக்கிழமை) ஆரம்பமாகியுள்ளது.

வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட குடும்பங்களை சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட 160 பேருக்கு இலவசமாக சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளதாக வைத்திய கலாநிதி சந்திரகுமார் தெரிவித்தார்.

இதற்கு முன்னர், 7 தடவைகள் இவ்வாறான இலவச சத்திரசிகிச்சைகள் இடம்பெற்றதாகவும் தெரிவித்த வைத்திய கலாநிதி, வடக்கின் கண் சத்திரசிகிச்சை நிபுணர்களும் இன்று இலவச கண்சத்திர சிகிச்சை முகாமில் கலந்துகொண்டு சிகிச்சையளிப்பதாக தெரிவித்தார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.