பெருவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

பெருவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளமையினைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.


பெரு தலைநகரில் 8 ரிக்டர் அளவில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

105 முதல் 180 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குறித்த நிலநடுக்கத்தினைத் தொடர்ந்து யு.எஸ்.ஜி.எஸ் உடன் இணைக்கப்பட்ட பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் சுனாமி எச்சரிக்கை எதனையும் வெளியிடவில்லை.

இதன்போது ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்த தகவல்கள் எவையும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.

இதேவேளை, இந்த வருடத்தில் உணரப்பட்ட மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கமாக இந்த காணப்பவதாக தெரிவிக்கப்படுகின்றமைக் குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.