கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை!!

சிலாபம் – திகன்வெவ பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை இடம்பெற்றுள்ளது.


திகன்வெவ பங்கதெனிய பிரதேசத்தைச் சேர்ந்த ஈ.எம்.சுஜித் குமார (வயது 28) என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.

கொலை செய்யப்பட்ட நபர் தனது மனைவியுடன் அடிக்கடி பிரச்சினையில் ஈடுபடுவாரென்றும் இதனால் அவரது மனைவி தந்தையின் வீட்டுக்குச் சென்றுள்ளமை விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இந்நிலையில் இன்று அதிகாலை அதிக மதுபோதையில் இந்நபர் தனது மனைவியைத் தேடிச் சென்றுள்ளதோடு அங்கு இடம்பெற்ற வாய்த்தர்க்கத்தின் பின்னரே அந்நபர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனையடுத்து பலத்த காயங்களுக்குள்ளான நபர் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் இனங்காணப்பட்ட போதிலும் அந்நபர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.