அசாத் சாலியின் கருத்து சிங்கள மக்களுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது! பிரசன்ன ரணதுங்க !!

பெரும்பான்மையின் மக்களைக் கோப மூட்டக் கூடியவாறு அறிவிப்புக்களை விடுக்க வேண்டாம் என ஆளுநர் அசாத் சாலியிடம் வேண்டுகோள் விடுக்கின்றோம் என நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.


மினுவாங்கொட வன்முறைச் சம்பவம் குறித்து அசாத் சாலி விடுத்த அறிவித்தலின் மூலம், சிங்கள மக்கள் மீண்டும் கோபம் கொண்டுள்ளனர் எனவும் அவர் கூறியுள்ளார்.

இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “இந்த நாட்டில் இருக்க வேண்டியது ஒரு சட்டமே. யாருக்காகவும் தனியான சட்டங்களை உருவாக்கிகொள்ள முடியாது.

இந்நிலையில், மேல் மாகாண ஆளநர் அசாத் சாலி போன்றவர்கள் இந்த நாட்டில் தனியான சட்டம் உருவாக்கிக் கொள்ளப் போய்த்தான் இன்று இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

இந்த நாட்டிலுள்ள விகாரையாக இருக்கலாம், முஸ்லிம் பள்ளியாக இருக்கலாம், கிறிஸ்தவ ஆலயமாக இருக்கலாம், எதனையும் பாதுகாப்புப் பிரிவுக்கு எந்த நேரத்திலும் சென்று சோதனையிட முடியும்.

இதற்கு தனியான சட்டங்களை கொண்டு வர முடியாது. ஆளுநர் அசாத் சாலி இனவாதத்தை தூண்டும் விதத்தில் கருத்துத் தெரிவித்து வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பள்ளிவாசல்களில் மேற்கொள்ளப்படும் சோதனைகள் நிறுத்தப்பட வேண்டுமென மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி தெரிவித்திருந்தார்.

ஆளுநர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இவ்வாறான நிலையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.