மகாவலி அபிவிருத்தி, சுற்றாடல் துறை மீளாய்வு கூட்டம்!!

மகாவலி அபிவிருத்தி சுற்றாடல் துறை அமைச்சின் முன்னேற்ற மீளாய்வு கூட்டம் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் நேற்று (27) பிற்பகல் ஜனாதிபதி
அலுவலகத்தில் இடம்பெற்றது.

சுற்றாடல் துறை அமைச்சின் கீழுள்ள நிறுவனங்களின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிகழ்ச்சித்திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் எதிர்கால அபிவிருத்தி திட்டங்கள் குறித்து இதன்போது விரிவாக மீளாய்வு செய்யப்பட்டது.

இராஜாங்க அமைச்சர் அஜித் மான்னப்பெரும, மகாவலி அபிவிருத்தி, சுற்றாடல் துறை அமைச்சின் செயலாளர் அநுர திசாநாயக்க ஆகியோரும் மகாவலி அபிவிருத்தி சுற்றாடல் துறை அமைச்சின் கீழுள்ள அனைத்து நிறுவனங்களினதும் தலைவர்கள் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் இந்த கலந்துரையாடலில் பங்குபற்றினர்.


 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.