வர்த்தக நிலையத்தில் தீ விபத்து!!

மட்டக்களப்பு நகரிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் பொருட்கள் எரித்து நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


இன்று (திங்கட்கிழமை) அதிகாலை மட்டக்களப்பு- கல்முனை, அரசடி பகுதியிலுள்ள வர்த்தக நிலையமொன்றிலேயே குறித்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது,  மூடியிருந்த  வர்த்தக நிலையத்தினை திறப்பதற்கு இன்று காலை அதன் உரிமையாளர் சென்றபோது எரிந்த மணம் வருவதை அவதானித்த அவர்,  மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்திற்கு தெரியப்படுத்தியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து அவ்விடத்திற்கு வருகை தந்த பொலிஸார், குறித்த வர்த்தக நிலையத்தை திறந்தபோது பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமாகி காணப்பட்டுள்ளது.

இந்நிலையில் தீ ஏற்பட்டமைக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் மட்டக்களப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.