நாளை, தான் சொல்லும் விடயங்களால் எதுவும் நடக்கலாம் என ஞானசாரர் எச்சரிக்கை!!

நாளை நான் சில முக்கியமான தகவல்களை வெளியிடவுள்ளேன், இந்த தகவல்கள் அனைவர் இடத்திலும் பதற்றத்தை தோற்றுவிப்பதற்கு வாய்ப்புள்ளது என பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


கண்டியில் இடம்பெற்ற சமய நிகழ்வொன்றின் பின்னர் கருத்து வெளியிடும்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இங்கு அவர் தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில்,

எம்மால் வெளியிடப்படும் சில முக்கியமான தகவல்களினால் பதற்றமான சூழ்நிலை ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது

ஆனாலும் அனைவரும் அமைதியான முறையில் சிந்தித்து செயலாற்ற வேண்டும். இதேவேளை இளைஞர்கள் அனைவரும் தற்போதைய சூழ்நிலையை கருத்திற்கொண்டு தூரநோக்குடன் செயற்படுவது மிகவும் அவசியமாகும்.

அந்தவகையில் பிரச்சினைகளை ஏற்படுத்திகொள்ளாமல் பொறுமையுடன் இருக்க வேண்டும் இல்லாவிடின் நஷ்டம் நமக்கே ஏற்படும் என குறிப்பிட்டுள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.