முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்தார் நரேந்திர மோடி!

பிரதமர் நரேந்திர மோடி முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை நேரில் சந்தித்து பதவியேற்பு விழாவுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.


குறித்த சந்திப்பு இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பு குறித்து டுவிட்டரில் கருத்து வெளியிட்டுள்ள மோடி, “பிரணாப் முகர்ஜியை சந்திப்பது எப்போதும், செறிவூட்டும் அனுபவத்தை தரும். அவரது அறிவும் அனுபவமும் இணையற்றவை. திறமையான, அனுபவம் வாய்ந்த அரசியல் தலைவரிடம் ஆசி பெற்றேன்” என தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான ஜனநாயகக் கூட்டணி 353 இடங்களில் வெற்றிபெற்றது. இதில் பா.ஜ.க மட்டும், 303 இடங்களில் வெற்றிபெற்று தனிப்பெரும்பான்மையை நிரூபித்துள்ளது.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் 30ஆம் திகதி பதவியேற்கவுள்ளார். இந்நிகழ்விற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் உட்பட 8 நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.